Sunday, September 25, 2011

எங்கேயும் எப்போதும்.....



எங்கேயும் எப்போதும்..... நம் வருகைக்காக காத்திருக்கிறார்கள் நம் பாசத்திற்குரியவர்கள்....

எங்கேயும் எப்போதும்.....கவனமாய் நாம் நம் வாகனத்தை ஓட்டுவோம்.....

இதைத்தான் சொல்கிறது "எங்கேயும் எப்போதும்....."

இனிமேலாவது சாலை விதிகளை விதிகளாக பார்க்காமல் நம் பாதுகாப்பாக கருதுவோம்....

ஜெய், அஞ்சலி, அனன்யா, ஷரவ் ஆனந்த் அருமையாக வாழ்ந்திருக்கிறார்கள்... அமுதாவின் அக்கா, பேருந்தில் பயணிக்கும் பயணிகள் நம்மை வருடுகிறார்கள்...

"இவர் பேரே தெரியலயே" என்று எண்ணும் பொழுது " சொட்ட சொட்ட " இசையில் நனைய வைக்கிறார் சத்யா.....

வேல்ராஜின் ஒளிப்பதிவில் சென்னையும் திருச்சியும் மிலிர்கிறது...

முத்துகுமாரின் வரிகள் " அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி , அந்த ஒவ்வொரு நொடியை பெண்ணை கண்டால் உருகிட வைத்தா னடி" அருமை.

"5 ரூபாய் இருக்கா?" "2 Good Day Biscuit அதோட ஒரு Kings" மற்றும் "செத்ததுக்கபுறம் தான உருப்புகளை எடுப்பாங்க ?" ,"4,5 தடவை யோசிச்சுதான் சொல்றேன் நான் Ready , Love பண்ணலா ம்" , "கோபப்படனும் அதுதான் மணிமேகலை ! " போன்றவற்றில் ஷரவ் ஆனந்த், அனன்யா, ஜெய், அஞ்சலி மிலிர்கிறார்கள்...

ஒரு நல்ல படத்தை தந்த FOX STAR Studios மற்றும் A.R.முருகதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

சரவணன் உங்களிடமிருந்து தமிழ் சினிமா ரசிகர்கள் நிறைய படைப்புகளை எதிர்நோக்குகிறோம்... நல்ல தொடக்கம்....