Wednesday, July 11, 2012

பொன் மேகம் தருகிறேன் - இந்த‌ பொன் மாலைப் பொழுதில்

மேற்கே
மேகத்தின் பின்னே
நின்று கொண்டு
வெண்மேகத்திற்க்கு
பொன் முலாம் பூசி
"பொன் மேக"மாக்கி கொண்டிருக்க‌...
மெல்ல மெல்ல
சுழல்கிறோம் நாங்கள்..

(இதனால் தான் என்னவோ மாலைப் பொழுதை
பொன் மாலைப் பொழுது என்று கூறுகின்றனரோ..??? )

அந்தி தொலைந்து செல்ல‌
சந்திரன் மெதுவாய்
தெண்படுகிறான் -மீண்டும்
காலையில்
சந்திப்போம் கதிரவனே..

நான் ஈ - Graphics Fly with Logics...அட அடடடா...

நான் ஈ - நானிக்கு சந்தர்ப்பம் இல்லை என்றாலும் சுதிப்  அருமையாக நடித்துள்ளார். Has a chance of winning Best supporting actor award..

superstarகள் பறந்து பறந்து அடிக்கும் இந்த காலத்தில் பறக்கும் "ஈ"யாய் இருந்தும் இயற்கைக்கு மாராக காட்சிகள் வைக்காதது அசத்தல்...

திரைக்கதையும் சொல்லிய விதமும் அருமை..

Graphics கோப்புகள் கலக்கலோ கலக்கல்...

Good Camera angle and good background score and also feel good songs..

நல்லதொரு பொழுதுபோக்குப் படம்..

சந்தானத்துக்கு சமந்தா...நல்ல பொருத்தம்...கடைசி காமெடி கலக்கல்..



Saturday, July 7, 2012

நிலவே.. நிஜமாய்


நிலவில் இருந்து கொண்டு
நிலத்தின் மடியில் படுத்திருக்கிறேன்..
நிஜமாய் நினைவுடன்
நின்னை நித்தம்
நிமிர்ந்து பார்க்கிறேன்
நெடுவே இருந்தாலும் நம்
நடுவே காற்றும்
இசையாய் இருக்க கண்களில்
இமையாய் இணைந்திருப்பாய்..

மேகம் உன்னை
வருடிச் செல்வதுபோல்
நீ என்னை
வருடுகிறாய்
வெண்ணிலவே..

உன்னை ரசிக்கிறேன்
உள்ளம் கணிந்து..
என்னை உரங்கவைத்துக் கொண்டே
உலகம் சுற்ற சுற்ற‌
உன் இடம் நகருகிறாயே...

நாங்கள் வரம் பெற்றிருக்கிறோம் உனக்கு பிள்ளையாய் பிறந்ததற்கு..

படுக்கை அறை மெத்தையை விட
அடுப்பங்கறை பூத்தரையில் தான்
சுகமாக தூங்குவாய் நீ..

உலகில் உனக்கு 
பிடித்த இடம் எது என்று கேட்டால்
அதற்கும் அடுப்பங்கறை என்று தான் 
சொல்வாய்...

இன்று பிறந்த நாளாய்
இருந்தும் சாதரண சேலை தான்
கட்டியிருப்பாய்...
நீ மிளிர்வது என்றால்
எங்களுக்கு மட்டும் அல்ல,
உலகிற்கே..அன்று
திருவிழா வாகத்தான் இருக்கும்...

மெத்தையில் கிடைக்காத
தூக்கத்தின்
சுகத்தை உன் மடியிலும்,
உன் சேலை விரிப்பிலும்
பெறலாம்..

உன் கரம் பிடித்து
நடை பயின்ற காலம்
ஞாபகம் இல்லை மாறாக,
என் கரம் பிடித்து
நீ நடை பயின்ற காலம்
ஞாபகம் இருக்கிறது...

அவ்வளவு அடிபட்டும்
ஒரு துளி வரவில்லை
உன் கண்ணில்
நாங்கள் அழுதிடக் கூடாதென்று...
தாய் என்பதாலோ...

நாங்கள் வரம் பெற்றிருக்கிறோம்
உனக்கு பிள்ளையாய் பிறந்ததற்கு..

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
அன்பு அம்மாவிற்கு..




Thursday, July 5, 2012

தாய்க்குப்பின் தமக்கை தான்..

"தாய்க்குப் பின் தாரம்" என்று 
தமக்கை இல்லாதவன் 
சொல்லிச் சென்றுள்ளான்..
இல்லை ஒரு 
தாரமான பெண் சொல்லியிருப்பாள்..

அம்மாவின் அரவணைப்பு
அக்காளிடம் மட்டும் தான் கிடைக்கும்..
அதனால் தான் என்னவோ
அகர வரிசையில் அவளையும்
இணைத்துள்ளனர்..
அப்பா...அம்மா....அக்கா...அண்ணன்..என்று!!!




Sunday, July 1, 2012

வீட்டிற்குள் விண்மண்டலம்..

படுக்கையில் படுத்து
விட்டத்தைப் பார்த்தால்
வீட்டிற்குள் விண்மண்டலம்..

விண்மீன்கள் சூல
பிறை நிலவும்..
வியாழன் கிரகமும்..
இந்த சனிக்கிழமை
இரவில் நண்பன் வீட்டில்
என்னை தாலாட்ட மறந்து
என் தமிழை தட்டி எழுப்பியது..

செயற்கையாய் இருந்தாலும்
இயற்கையாய் தோன்றிற்று..

மணித்துளி..மழைத்துளி...

சில்லென்று வீசியது
மழைக்காற்று..
இழுத்துச்சென்றது
ஆச்சியின் குடையை..
அந்த வயதிலும் இளமையாய்
ஓடிப் பிடித்தார்..
கூடவே மழலைச் சிரிப்பு..

சர் என்று சில 
மணித்துளிகள்
மழைத் துளிகள்..
நண்பனுடன்
சிறு தூரம்
தூரலில் பயணம்..
என் அப்பாச்சியோடும் தான்..