Friday, December 9, 2022

விமானம்

உறவுகளை தேடும்
சோகமுற்ற விழிகள் !
கண்டதும் ஆனந்தித்து
திமிரும் இதழ்கள் !!
கன்னத்தில் பரிமாறும்
முத்தங்கள் !!!
வானில் இருந்து
சற்று தான் 
இறங்கிய பொழுதும் 
இப்பொழுது தான்
பறக்கத் தொடங்கும்
மனம் இது
விமான நிலையத்தில்...


சென்னை
09.12.2022

Sunday, November 13, 2022

குளிர் தனல்

காதினுள் ஊடுருவி
என் உயிர்
வாட்டும் குளிர் தனலே..

இரவே அழகுதான்
இதில் மழை நீயும்
வந்து கொல்கிறாய்...

திகட்டுதே கண்களும்
உறங்க மறுத்து.... !!!

சென்னை
12.11.2022

Monday, July 25, 2022

அவனும் அவளும்...

முன் உறக்க
நினைவுகளில் 
இல்லா போதும்
நடுநிசி கனவில்
அவனை அவள்
சந்தித்தாள்...
மணமுடித்து அவள் போனாலும்
அவளுக்கான கவிதைகளை
அவன் வாசிக்க
சிலாகித்து சிலையாகி
அவன் வசம்
காதல் கொண்டு
கதைக்க கடவி
அவனோ அவள்
மணமாகா நிலை 
அறிந்து இருவரும்
மணமுடிக்க சம்மதம்...
கால தாமதத்தில்
அவர்களுக்கு கிடைத்த
காத்திருத்தலின் பரிசு...

கனவுலகம்
நடுநிசி 3.00மணி 






Sunday, June 19, 2022

தந்தையர் தினம்

இவரும் ஒரு கவிஞராக இருந்திருக்ககூடும் ...
உங்கள் வரிகள்
கிடைக்கும் நாளுக்கு
காத்திருக்கிறேன்...

நாங்கள் இருவரும்
அவ்வாறாக பேசுவது
கிடையாது...
கார்த்திகை முதல் தை 
முடியும் காலம் மட்டும் 
நாங்கள் நெருங்கிப் பழகும்
காலம் அது ..
எனது படிப்பை பற்றியோ 
மற்ற விஷயங்களை பற்றியோ உரையாடல்கள் இருக்காது. 
அய்யனும், பூஜிக்கும் முறையும் பற்றியே நிறைந்திருக்கும்.
வாழ்க்கையின் தத்துவத்தை சரணங்கள் மூலம் என்னுள்
கடத்தி சென்றுள்ளார்
என்றே சொல்வேன்... 

கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை...
குண்டும் குழியும்
கண்ணுக்கு வெளிச்சம்...
தூக்கிவிடையா.. ஏத்திவிடையா...
சாமியே...!!!  அய்யப்போ! !!!

உன் இழப்பு கண்டு
திக்குத்தெரியாது
யோசித்துக் கொண்டிருக்க,
எனை அறியாது என்
நெஞ்சு முடிகளை சுற்றிகொண்டிருக்கும்
என் கை விரல்கள்... 
நேரம் கெட்ட நேரத்தில்
அருகில் இருக்கும் சீப்பை
எடுத்து என் தலை கோரும்....
நீ எனக்குள் இருக்கும் 
தருணம் உணர்ந்து
என் இதழ் உதிரும் 
புன்முறுவல்... 

365 நாட்கள் கடந்து விட்ட போதும்
உன் நலம் விசாரிக்கும் 
உன் நண்பர்கள் கேட்கும் 
நிமிடமும் சேர்த்து...
365 வருடம் ஆனாலும்
நித்தம் ஏதோ ஒரு நொடியில்
உன் இருப்பு இங்கு நிலைக்கும்...

#தந்தையர் தினம்

விருதுநகர்
19.06.2022

Tuesday, June 7, 2022

அப்பா !!!

வரம் ஒன்று
கிடைத்தால்
பேரன்களுக்கு
தத்தம் தாத்தாக்களை
திரும்பக் கேட்பேன்...

பேரன்களின் அன்பிற்கு முன் மகன்களின் அன்பு
தோற்றுப்போகிறது

-அப்பாவின் முதலாண்டு நினைவு தினம்
06.06.2022
வைகாசி மாதம், வளர்பிறை சப்தமி திதி.

Sunday, May 8, 2022

கிராமம்

சுட்டெரிக்கும் வெயில்
வெயில் தணிக்க ஆங்கோர்
ஒற்றை மரம்...
மரத்தடியில் ஓர் பலகாரக்கடை
பலகாரக்கடை இருக்கையில்
சில சனங்கள்
சனங்கள் நிழற்குடை ஆன
நிழற்குடை பேருந்து நிறுத்தம்
நிறுத்தம் இருந்தும் நில்லாது
செல்லும் பேருந்து
நிற்கும் ஒரு சில பேருந்தில்
ஏறி இடம் இன்றி இன்ஜினில்
அமர சுட்டெரிக்கும் இக் கிராமம் தனில்...


விருதுநகர்
8.5.2022

Saturday, April 16, 2022

புத்தகம்

பூட்டிய பெட்டுக்குள்
தான் எத்தனை
பொக்கிஷங்கள்...

"புத்தகம்" திறக்க
உன் "கூரை" பொட்டை
கொட்டித் தீர்க்கும்
புதையல்...

இவன் பால்
நுழைந்துவிட
புவியீர்ப்பு விசையும்
மலுங்கிவிடும்...

புரட்டிப் படித்தபின்
பகிர்வது சிறப்பு..
இவன் புகழ் பேச
நள்ளுநர் ஆயிரம்
கிட்டுமே...

இனிய புத்தக தின 
வாழ்த்துகள்

படிக்கப் படிக்க
வீடும் நூலகம்
தான்...

#விருதுநகர்
16.4.2022