சில்லென்று வீசியது
மழைக்காற்று..
இழுத்துச்சென்றது
ஆச்சியின் குடையை..
அந்த வயதிலும் இளமையாய்
ஓடிப் பிடித்தார்..
கூடவே மழலைச் சிரிப்பு..
சர் என்று சில
மணித்துளிகள்
மழைத் துளிகள்..
நண்பனுடன்
சிறு தூரம்
தூரலில் பயணம்..
என் அப்பாச்சியோடும் தான்..
No comments:
Post a Comment