Friday, August 3, 2012

ஐம்புலன்களும் அசைந்தாட


மழைத்துளி இன்று
சிறுஉளியாய்
மரத்துப்போன
என் கவி
மனதை
செந்தமிழாய்
செதுக்கியது...

துளியின் ஓசையும்
உளியின் ஓசையும்
ஒன்றுதான் சற்று
கவனித்துக் கேட்டால்..

மண் வாசம் இன்று
மன வாசம் வீசச் செய்த‌து
மல்லிகையாய்..

கருமேகம் சூழ்ந்து
கண்களையும்
கவிபாடக்
கனிந்தது

மெய்யாய் தன்
வசைபாட‌
ஐம்புலன்களையும்
அசைந்தாடச் செய்து
வசம் செய்தது இந்த‌
சிறுமழை

No comments:

Post a Comment