Wednesday, September 19, 2012

"சங்கத்தமிழ் மூன்றும் தா" !!!

அன்னை கேட்டாள்
அக்காளும் கேட்டாள்... 
கவிதைக்கு காரணம் - 
"பிள்ளை" - யார்? என்றோ நினைத்து..!!!
அட கணேசா..பிள்ளையார் நீதானா..!!!

எனக்கு தெரிந்தது
உன் துதியும்
உன் சகோதரனின் துதியும் தான்

நித்தம் கேட்டதால்
அருளினாயோ ச ங்கத்தமிழ்
மீது பற்றை எனக்கு..
இதுதான் கடைசி வரிக்கு பரிசா !!!

நல்ல நண்பனாய்
நல்லது கெட்டது என்று
என்னுடன் இருக்கிறாய்..
நன்றி சொல்வேன்
அவ்வப்போது எப்போதாவது..!!!
தோன்றினால் ...!!!!

இதையும் நீயே செய்யச் செய்து - அட
சுய விளம்பரம் தேடிக் கொள்வோம்
நாம் இருவம் சேர்ந்து.. !!!

இத்தனை நாளும்
வரையும் போது
அழகாய் வந்த நீ
இன்று வரிகள் ஆகவும்
வந்து சிறப்பு செய்தாய்

சிறந்த நாள் எங்களுக்கு - நீ
பிறந்த நாளான இன்று - பிரியமானவனே..!!!

நிறுத்த முடியவில்லை
தொடர்ந்து
"சங்கத்தமிழ் மூன்றும் தா" !!! :-)

No comments:

Post a Comment