Monday, September 24, 2012

"ரயில்" ஸ்நேகம்


உன்னை முதலில்
சந்தித்தது இந்த
புரட்டாசி சனியில் தான்

கம்மாய் கறை ஓரம்
அய்யனார் கோவிலில்
பொங்கலிட வரும்போது
பார்த்த உன்னை இன்று
நித்தம் என் வீட்டு
சந்தில் சந்திக்கிறேன்

சரியாகத்தான் பெயர்
சூட்டியுள்ளனர் உனக்கு..
ரயில் பூச்சி என்று..

இன்ஜின் புகைக்கூடாய்
உந்தன் இரு ஆன்டனாக்கள்
அதன் பெட்டியாய் உந்தன்
வகுக்கப்பட்ட உடல் அமைப்பு
சன்னலாய் மஞ்சள்
நிற வைரக்கற்கள்..

உன்னை தற்காக்க
சுருண்டு கொள்ளும்போது
என் யானைமடி கோர்த்த
தங்க மோதிரமாகிறாய்..

சந்திக்கும் வேலைகளில்
மலரும் நினைவுகள்..
புரட்டாசி மாத பொங்கலும்
அரை நாள் ஆதி காலத்து
வாழ்க்கையும்,
கம்மாய் கறை காத்தும்
 

No comments:

Post a Comment