பௌர்ணமியே...
மேகம் விலக
மெதுவாய் நீ
காட்சியளிப்பது,
இந்த பிரபஞ்சம்
வானம் எனும்
காகிதத்தில்
மேகம் எனும்
கரித்துண்டு கொண்டு
வரைவது போல்
தோன்றுகிறது...
நீ எவ்வளவு தான்
அழகாக தோன்றினாலும்
பிரபஞ்சம் ஒவ்வொரு
முறையும் உனை வரைந்ததும்
திரும்ப மெல்லமாய்
அழித்து மீண்டும் மீண்டும்
மெருகூட்டி உன்னை
வரைந்து கொண்டே இருக்கிறது
ஒரு திங்களில் மீண்டும்
மிளிர்கிறாய் இதற்கு
முந்தய திங்களைவிட !!!
மேகம் விலக
மெதுவாய் நீ
காட்சியளிப்பது,
இந்த பிரபஞ்சம்
வானம் எனும்
காகிதத்தில்
மேகம் எனும்
கரித்துண்டு கொண்டு
வரைவது போல்
தோன்றுகிறது...
நீ எவ்வளவு தான்
அழகாக தோன்றினாலும்
பிரபஞ்சம் ஒவ்வொரு
முறையும் உனை வரைந்ததும்
திரும்ப மெல்லமாய்
அழித்து மீண்டும் மீண்டும்
மெருகூட்டி உன்னை
வரைந்து கொண்டே இருக்கிறது
ஒரு திங்களில் மீண்டும்
மிளிர்கிறாய் இதற்கு
முந்தய திங்களைவிட !!!
No comments:
Post a Comment