Wednesday, October 17, 2012

மழையே.. !!!இது உனது காலம் !!!

மழையே.. !!!
என் வீட்டிற்க்கு வராவிட்டாலும்
எங்கள் அருகே உள்ள இடங்களில்
ஈரம் காயாத சாலையும்
குளித்து வந்த குதூகலத்தில் 
பச்சிளம் மரங்களும் அதன் மீது 
மென்மையாய் வருடும் காலை வெயிலும்
அழுக்காய் இருந்த
சென்னையை சிறிதாய் 
குளிப்பாட்டி
அழகாக்கி
நீ விட்டுச் சென்ற
சுவடுகளைக் கண்டு
ம னம் மகிழ்ந்தது!!!

எப்பொழுது வந்திருப்பாய்
என்றென்னும் போது
வீசிய பனிக்காற்று மூலம்
வாக்கு மூலமாய் நீ
சற்றுமுன் வந்ததை
அறிந்தேன்!!!

விடியல் நேரத்தில்
வாசல் தெளித்து
கோலம் போட்டுச்
சென்றுள்ளாய்!!!

நல்வரவாகட்டும் உந்தன்
விஜயம் !!!
இது உனது காலம் !!!
சற்று தாமதம் தான்
உன் வரவு
இருந்தாலும்
இனிமை நிறைத்திடு !!!

No comments:

Post a Comment