Wednesday, October 17, 2012

நகரத்தில் ஒரு கிராம வாழ்க்கை!!!

நேற்றய கோவத்தை 
தீர்ப்பதற்காக இன்று
காலை எங்கள் இல்லம்
வந்தாய்!!! மழையே நன்றி !!!

நீ வந்ததை ஆழமாக பதிவு
செய்திருக்கிறாய்!!!

உன் நீர் செல்ல சாலையில்
மா நகராட்சி தோண்டிய கால்வாய்க்காக‌
அருகே கிடந்த மண் குவியல்
வயக்காட்டு வரப்பானது!!! ஆம்
கருஞ்சாலை செஞ்சாலையானது
தண்ணீர் தேங்கி!!
நாத்து நடாத குறைதான் !!!

வயக்காட்டில் வரப்பில்
சென்ற ஞாபகமாய்
நாங்கள் நடந்து சென்றோம் !!!
எப்படியோ மழை நீர் - கால்வாயில்
செல்ல வில்லை என்றாலும்
மழை நீருக்காக வெட்டிய குட்டையின்
ம‌ண்குவியலின் மீது நாங்க‌ள் நடந்தோம்!!!
மா நகராட்சிக்கு நன்றி !!!
ஒரு வகையில் உதவியதற்கு!!!

நகரத்தில் ஒரு கிராம வாழ்க்கை!!!

வயக்காட்டுக்கு வேலைக்கு
சென்ற விவசாயிக்கும்
இன்று ந‌டந்து சென்ற‌
எங்களுக்கும் ஒரே வித்யாசம் தான்
அவர்கள் கையில் மண்வெட்டி!!!
எங்கள் கையில் மடிக்கணிணி!!!

சரி தண்ணீர் தேங்கிய சாலையில்
எங்கள் சக்கர வாகனங்களில்
சென்றது ஏதோ டிஸ்கவரி டிவியில்
காட்டுக்குள் எருமைக்கடா ஜீப்பில்
சகதிக்குள் சென்றது போல் இருந்தது!!!

No comments:

Post a Comment