Friday, October 19, 2012

அழகு தான் !!! அழகு தான்!!! அழகு தான்!!!!

மழையில் ரெயின்கோட்டில் 
மழலையும், குடைக்குள் 
மங்கையரும், அவர் 
தலையில் மலரா மல்லிகை 
மொட்டும், அதில் மயங்கும்
நம் மனமும், மலர்ந்த
முல்லையும், குளித்த 
மரஞ்செடிகளும், அதன் நுனியில் 
இருந்து கீழே குதிக்க
தயாராய் நிற்கும் 
மழைதுளிகளும், அதில்
பிரதிபலிக்கும் சூரியனும், காதோரம்
கேட்கும் மெல்லிய
இசையும், பாதுகாப்பான
"அப்பாச்சி" பயணமும், சூடாய் இஞ்சி
தேனீரும், சாலையில் விற்கும்
நவராத்திரி கொலு பொம்மையும் அழகு தான் !!!
அழகு தான்!!! அழகு தான்!!!!

கொடைக்கானல், ஊட்டி,
தொட்டபெட்டா, கோவா
என்று ஒரு நாளில் சுற்றி வந்தேன்!!!
வேரென்ன நம் போயஸ் தோட்டமும்,
ஆழ்வார்பேட்டையும், மயிலாப்பூரும்,
கடற்கரைச் சாலையும் தான் அப்படி
மாறியது பெய்கின்ற மழையிலும்,
வீசுகின்ற மென்மையான குளிர் காற்றிலும்!!!

No comments:

Post a Comment