Saturday, October 27, 2012

சரஸ்வதி பூஜை முடித்தோம்!!!

குருத்தோலை கட்டி
திருவிழா காணும்
கோவில் ஆனது
குடியிருக்கும் வீடுகள்!
தொழில் செய்யும் கூடங்கள்!!

தெருக்கள் தோறும்
திஷ்டி களித்த
பூசணிக் காய்கள்!
சிதரு தேங்காய்கள்!!

சாமந்திப்பூ சூடி
சுற்றித்திரிகிறது
புதிதாய் மிளிரும்
பழைய வாகனங்கள்!!

பட்டாடை உடுத்தி
உற்சாகமாய் மழலைகள்!
மங்களமாய் மங்கையர்கள்!!
ஆனந்தமாய் ஆடவர்கள்!!!

கற்பூரம்,விபூதி,மலர்
வாசம் சேர்த்து
சரஸ்வதி பூஜை
முடித்தோம்!!!

மழை பெய்து
மண்ணும் குளிர்ந்தது!!!

No comments:

Post a Comment