Friday, October 12, 2012

புதிதாய் எனக்குள் ஒரு குழந்தைத் தனம்...


சிறு குழந்தை
ஆகிவிட்டேன் சில தினங்கள்...!!!

அசாதாரண பேச்சை
அதட்டல் என நினைத்துக் கொண்டு
அழுது கொண்டு 
இருந்தேன் !!!

இந்த குட்டி பொம்மை 
வேண்டுமென அடம்பிடிக்கும்
குழந்தை போல‌
இந்த குமார் எனக்கு
வேண்டுமென‌
உன்னிடம் உன்னையே 
திரும்பக் கேட்டேன்!!!
கண்ணில் கண்ணீர் ததும்ப!!!

பருவ காலம் 
கடந்துவிட்ட‌
நம் உறவில் இதென்ன‌
புதிதாய் பிறக்கிறது
குழந்தைத் தனம்... 
இருந்து விட்டுப் போகிறது !!!

தன் பிள்ளையை
தட்டிக் கொடுப்பது போல
"இதுக்கெல்லாம் கோபப்பட்டால்
எப்படி மாப்பிள !!! ???"
என செல்லமாய் கேட்டுவிட்டு
"இன்னும் எத்தனை சண்டை
காத்திருக்கிறது" எனச் சொல்கிறாய்!!!
இதுதான்
கொஞ்சவும் செய்து
கிள்ளியும் விடுவதா???


கண்ணீருடன் கூடிய‌
சிரிப்புக்கு சிறப்பு அதிகம்!!!
இதுவும் அப்படியே...

No comments:

Post a Comment