Saturday, February 4, 2017

அமைதியாய் ஓர் விளைச்சல்

கண்டது நம் ஒற்றுமை மட்டுமல்ல
நம்முள் ஒளிந்திருக்கும்
ஒழுக்கமும் தான்...!!!

எம்மை நீ அறிந்து
உம்மை நான் அறிந்து
நட்பு பாராட்டி, கதிரென வளர
இடையில்இருவர் இடத்தும்
புகுந்தது சில களைகளாய்...
இருந்தும் அறுவடை செய்தோம்...!!!

உண்ணாவிரதம் முடிக்க வந்த
ஓர் உணவாய் இவ்வஹிம்சா வழி
போராட்டத்தை முடித்து வைக்க
வந்ததோ ஒரு வன்முறை...!!!

விளைச்சல் ஈட்டியும்
விவசாயி தான் கொண்டாடினானா??
அஹிம்சை என்பது
போராட்டத்திற்கு மட்டுமா?
கொண்டாட்டத்திற்கும் சேர்த்துத்தான்...!!!

No comments:

Post a Comment