Saturday, June 30, 2012

பொய்த்த மழை பெய்து தீர்க்க.. கவிதை ஒன்று தோன்றியது..


பொய்த்த மழை
பெய்து தீர்க்க‌
சிறு குளங்கள்
சாலையோரம் தோன்றி
நீந்திச் சென்றேன்
வாகன நெரிசலில்...

மேகம் சிறிதும் இன்றி வானம் மிரட்ட,
முட்டி நின்று சில வாகனமும்
முரண்டு பிடித்து சிலவும் நிற்க நடுவில்
நகர்ந்து சென்றோம் நத்தையாய்..
நானும் என் பொன்டாட்டியும்.. ( Apache )

தெளித்து வைத்த 
வாசலாய் சாலை..அதில்
முக்காடு போட்டுக் கொண்டும்
முனங்கால் வரை கால்சட்டை மடித்தும்
ஆவி பறக்கும்
வடை கடை
தாண்டி
ஒரு குடையில்
இரு கைகள் இணைந்து
கசிந்து கொண்டிருந்தது
காதலாய்..

வீடு சென்று 
நண்பனைக் கூட்டி
வியாழனும் ஆகிப்போக‌
வினாயகருக்கு
விளக்கு ஏற்றினோம்..

வலம் சுற்றி வந்து
வெண்ணை சாத்திய 
ஆஞ்சனேயரை
கைகூப்பும் பொழுது
" வெண்மையாகி போனதனால்
நெய் மறுவி
வெண்"ணை" ஆனதோ"
எனத் தோன்றியது..

பெய்யென பெய்தது
மழை மட்டும் அல்லாது நான்
மழலையில் பயின்ற தமிழும் தான்.. 

:-)

No comments:

Post a Comment