சந்தோசம் மட்டும் தானா
என்றால் அதான் இல்லை...
சில சண்டைகளும் வந்தது...
3,4 பேரில் தொடங்கி படிப்பு முடித்ததும்
அனைவரும் படை எடுத்தோம் சென்னைக்கு...
முதலில் 10,11 பேரை தாங்கியது
வீடும், வீட்டு உரிமையாளரும்..
அவ்வளவு எளிதல்ல உரிமையாளர் சம்மதிப்பது...
ஒருவர் பின் ஒருவராக பணி அமர
இருசக்கர வாகனம் அவசியமானது...
நிறுத்த இடமின்றி இரு கூடானோம், அருகருகே
சிறு மன வருத்தத்துடன்!!!
பின் வீட்டில் ராஜேஸ் TV வாங்க
அப்பொழுது தெரியவில்லை
அடுத்த சண்டை வரும் என்று...
சும்மா இருந்த சிங்கத்தை எழுப்பிய
கதையாக channel மாத்துவதில் ஒரு
சண்டை வந்து பின் சண்டையே வந்துவிடக் கூடாதென்று
புதிதாய் ஒரு TVயும் TaTa Skyயும் வந்தது...
இவ்வாறாக ஒரு வருடம் சென்றது
வேலையில் அனைவருக்கும் சிறிதாய் முன்னேற்றம்..!!!
எத்தனை நாள் தான் கிருஸ்ண பவனிலேயே சாப்பிடுவது..
வள்ளியின் அலுவலக நண்பர்கள் தயவால்
சரவணன் மாஸ்டர் சிக்கினார்...
அய்யர் வீட்டு சாப்பாடு..அறுசுவையாய்...
கொஞ்சம் மாதங்கள் கலித்து
அய்யர் சென்றுவிட கீழ் வீட்டு
அம்மாச்சி சமைத்து தந்தார்..இதுவும்
அறுசுவைதான் அதோடு அசைவமும் உண்டு...
காலையில் எங்கள் வீடு வள்ளி அலுவலக நண்பர்களின்
கூடாரமாகி கும்மாளம் குதூகலம்...
இதுவொரு மூன்று நான்கு மாதம் செல்ல
அம்மாச்சியும் சென்றுவிட வேறு ஆள் தேடினோம் சாப்பாட்டிற்கு
ருசிகண்டுவிட்டோம்...சிக்கலானது
குமார் வந்தார்..தினமும் தாமதம்...அவருடனும் சண்டை...
நண்பர்களுக்குள் சிறு மனக்கசப்பு
ஏற்பட்டு ஒரு சில
நண்பர்கள் பிரிந்தனர்..
வருடம் இரண்டானது...
சூழ்நிலை..வீடு மாறினோம்..
19/1, கீழ்பாக்கத்திலிருந்து 7/6, சூளைமேடு
பெயர்ந்தோம்...
வள்ளி திருமணம்..எண்ணிக்கையில் ஒன்று குறைய
புதிதாய் வந்தார் பிரசாத்...
புதிய நட்பு..ஒரே ஊர்க்காரர்..பழகிவிட்டோம் சில நாட்களில்
வீட்டின் அருகில் சமையல் செய்ய ஆள் கிடைக்க
சமையல் பாத்திரம் வாங்கினோம்...சமையல் ஆரம்பித்தோம்...
காய்கறி வாங்குவது, பலசரக்கு வாங்குவதென்று தினமும்
புதியதொரு வேலை சேர்ந்து கொண்டது..
பின் அதிலும் சண்டை வந்தது..
யார் வாங்குவதென்று...என்ன வாங்குவதென்று..!!
பின் ராஜேஸ் பெங்களூரில் வேலை கிடைத்து
இடம் பெயர...நிறைய சந்தோசம் இருந்தாலும்
சிரிது வருத்தம்
ஒரு பெரிய கை குறைந்து விட்டது
வீட்டை பார்ப்பதில், கேரம் விளையாடுவதில்,
பின் முத்துவிற்க்கு ஈடுகொடுக்கவும்...
சாமிக்கு(கார்த்திக்கு) சினிமா செல்வதற்க்கும்.. ;-)
இங்கும் வந்து சேர்ந்தது "வெள்ளம்" மறுபடியும்
இரண்டு நாள் மின்சாரமில்லை சபரி வீட்டுக்கு
மூட்டையை கட்டிக் கொண்டு சென்றோம்
அன்று மும்பையில் ஹோட்டல் தாக்குதல் துயரம்..
தெரிந்து கொண்டது சரஸ்வதி பூஜையை ஓட்டிய
நாட்களில் சென்னையில் நல்ல மழை பெய்யும்...!!!
மாதங்கள் உருண்டோட ஒருநாள்
சாப்பிட அனைவரும் சாப்பிட செல்ல
விளையாட்டாய் ஆரம்பித்தது ஒரு விணை!!!
பெரிய சண்டை... வாய்த்தகராறு...
அதுவரை வந்ததில்லை அப்படியொரு பெரிய சண்டை!!!
இரண்டு மூன்று நாட்கள் பேச்சு இல்லை எங்களுக்குள்!!!
ஒரு கனத்தில் நான் யோசித்தது
இந்த வீட்டில் இருக்க வேண்டுமா என்று..
நிலை தடுமாரிப் போனேன் !!!!
No comments:
Post a Comment