A Nice day to remember (17.12.2012)...Its been 8years rolled out in Chennai...
8 வருடங்களுக்கு முன்பு
வாழ்க்கையில் முதல் முறையாக
வீட்டை விட்டு ஏன்
ஊரை விட்டு நெடுதூர பயணம் ....
வேலைதேடித்தான் வேரென்ன
சென்னைக்கு தான்...
பெற்றோரை பிரிந்தாலும்
பிரிதல் தெரியாது பிரியமான
நண்பர்களுடன் மேன்சன் தவிர்த்து
வீடு பார்த்தோம்...ஒரு குட்டி சண்டை
போட்டு வீடு வாடகைக்கு கிடைத்தது..
நண்பர்கள் உறவினராக
ஒவ்வொரு தருணமும்
அன்பை பரிமாரி இரவில்
அனைவரும் வரும் வரை காத்து
எல்லோரும் சேர்ந்து உணவு உண்டு
காலம் க டத் திநோம்...
மறக்க முடியா 7H, 47A
பேருந்து பயணங்கள்!!!
நுங்கம்பாக்கத்து கன்சல்டன்சி
கதவுகளை தட்டிய ஞாபகம்!!
முடிந்த பிறகு மதிய நேர
ஆந்திரா மெஸ் உணவு...
பின் வீட்டிற்க்கு வந்து
விகடன், குமுதம் சகிதம்
FMல் சங்கீதம் தான் பொழுது போக்கு!!!!
சனிக்கிழமைகளில் புதிய படங்கள்,
ஞாயிறுகளில் கடற்கரை பயணம்...
இது மட்டுமா சுனாமி சோகம் சேர்ந்து கொள்ள
அன்று தான் கற்றுக்கொண்டும் அரசியல் என்ன என்று..
நாம் யார்...வெறும் முட்டாள் தான்...
ஒரு வழியாக முதல் வேலை கிடைத்தது...
ஒரு சனிக்கிழமை தாத்தாவை இழந்தேன்..
அன்று இந்த பட்டினம் எனக்கு சொல்லி கொடுத்தது
ஒன்று தான் இந்த வாழ்க்கை இரக்கமற்றது என்று...
முதல்முறையாக ஒரு மழைக்கால காலைப் பொழுதில்
வீட்டு வாசல் வந்தது "வெள்ளம்"
அன்று முழுதும் தண்ணீரில் நேரம் களித்து
மின்சாரமும் இல்லை, சாப்பிட சாப்பாடும் இல்லை
ஒரு வழியாக சமாளித்தோம்..!!! மெழுகுவர்த்தியுடன்...
காலையில் கிருஸ்ணபவண் பொங்கலையும்
இரவில் பக்கத்து வீட்டுகாரரிடம் வாகனத்தை
நிருத்த சண்டையுமாய் உருண்டோதியது சில மாதங்கள்...
புதிய வேலைக்கு மாறினோம்...
புதிய வீட்டிற்க்கும் மாறினோம்...
சில புதிய அருகில் குடியிருப்போர்
நண்பர்களாய் கிடைத்தனர்...
ஒவ்வொருவரின் பிறந்தநாள்
கொண்டாட்டம் இரவிலும் பின்
சத்யம் தியேட்டரிலும் இன்பமாய்
பொங்கியது...
வீட்டில் வள்ளியின் புண்ணியத்தால்
TV, Washing Machine, Laptop, Internet வர
வசதியானோம்...அவனுக்கு கல்யாணம் ஆக
ஒவ்வொன்றாய் கலண்டு கொண்டு சில
புதிதாய் எங்களுடன் சேர்ந்து கொண்டது...
புதிதாய் நண்பர்கள் கிடைக்க
அர்த்தமுள்ளதாகவும் ஆனது
வாழ்க்கை...!!!
ஆண்டுகள் கடந்தாலும்
நாங்கள் அப்படியே தான் இருக்கிறோம்
சுய முகவரியோடு !!!
சில தருணங்கள் கோலமிட
இன்னும் நிறைய இருக்கிறது
மனதிர்க்குள்...!!! மலர்ந்திடும் அவ்வப்பொழுது!!
No comments:
Post a Comment