என் தங்கையுடன் கடந்த ஒருவார காலமாக எலும்பியல் நிபுணரிடம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. என்னை ஒரு வேலையும் செய்யாமல் ஒரு மணி நேரம் அமரச் செய்தால் , ஒன்று உறங்கி விடுவேன், இல்லை சற்றே சுற்றம் கவனிப்பேன். இந்த நாட்களில் இரண்டாம் ரகமானது எனக்கு...கவனித்த காரணமாய் இதைப் பகிர்கிறேன்... சிந்தனை என்றதால் வினாக்களும் எனக்கு உண்டு...கலந்துரையாடுவோம்...!!!
நம் உடல்அமைப்பும் செயல்பாடும் நம் சுற்றுச்சழலை ஒத்தே இருக்கும் என்பதில் ஐயமில்லை... வெயில் பழகிப்போன ஒன்று நம் அனைவருக்கும்...நம் தோலின் வண்ணத்தின் காரணமும் அதுதானாகும்...
மருத்துவமனையில் அமர்ந்து கவனித்த பொழுது இங்கும் அங்கும் சென்ற நபர்கள் சொல்லித் திரிந்தது வைட்டமின் D குறைபாடு தான்... அதனால் தான் வந்து விட்டது மூட்டு வலியும் முதுகு வலியும்...இதே காரணம் தான் என் தங்கைக்கும்...
இன்றைய அலுவலகம் குளிருட்டப்பட இயற்கை காற்றையும், சூரிய ஒளியையும் இழந்து குறைபாடனது...நம் உடம்பு வெயிலுக்கு பழக்கப்பட்டது...நம் பெற்றோர்களும் அலுவலகம் சென்றனர். அவர்கள் யாரும் இப்படிப் பட்டதில்லை...அன்றைய அலுவலகம் ஜன்னல்கள் கொண்டது. சூரிய ஒளியும் உள்ளே வரும். இயற்கை காற்றும் உள்ளே வீசும்.
இது ஒருபுறம் எனக்கொள்ள மற்ற நோயாய் மன அழுத்தம், சோர்வு என அடுக்கிச் செல்லலாம். நாகரீக வளர்ச்சியில் உடம்பின் செயல் பாடுகள் குறைந்து போயிற்று. இயந்திரங்கள் நம்மை சோம்பேறிகளாய் ஆக்கி ஆடம்பர வாழ்க்கையில் ஆரோக்கியம் தொலைக்கிறோம்...
"குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியாய்
இன்றைய அலுவலகங்கள்...அதில்
அடிப்படை சத்துக்கள் செத்து
மூச்சுள்ள காரணத்தினால்
எம்பார்மிங் செய்யப்படாத
உயிருள்ள பிணமாகிப் போனோம்...!!!"
நேரம் கிடைக்கும் போது அலுவலகம் விட்டு வெளியே வாருங்கள்...அவ்வப்பொழுது இயற்கை காற்றை சுவாசியுங்கள்... சூரிய ஒளி நம் உடம்பினில் படட்டும்... முடிந்தவரை இயந்திரங்களை ஒதுக்கி உடம்பை இயக்குவோம்...!!!
"ஆடம்பரம் ஆரோக்கியமாகாது
ஆரோக்கியம் ஆடம்பரம் ஆகட்டும்...!!!"
No comments:
Post a Comment