சற்று தொலைவில் நின்று
கண்டுகொள்ளாதிருக்க,
அருகினில் வந்து நீயே
அறிமுகமானாய்...!!!
அன்பின் அடையாளம் காட்டி
சற்று தள்ளி நிற்க -
முதலில் முறைத்த நட்பும்
நகைத்து அரவணைக்க -
உறவுகளும் உற்சாகமாகி
புதிதாய் தங்கைகள் மலர்ந்து
வண்ணங்கள் ஆனது...!!!
நீ உலகை மட்டும் அல்லாது
உன் கனவுகளோடும் நித்தம்
போராடுகிறாய்...!!!
உலகினில் உன்
கனவை விதையாய்
நடு....அது
மரமாய் வளர்ந்து
மலராய் மலர்ந்து
கனியாய் கனிந்து
காயாய் கசந்து
பழமாய் இனித்து
பின் விதையாய்
விழுந்து பல சோலை
அமைந்திட என்றும்
உமக்கு வேண்டிய
காற்றாய்
தண்ணீராய்
அரணாய்
இவ் ஆண்மை
உன்னை போற்றுதும்
எம் அருமை
பெண்மையே...!!!
இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்...
Happy Women's Day
08.03.2017
No comments:
Post a Comment