அன்பு சகோதரருக்கு,
வணக்கங்கள். இங்கு நலம். தாங்களும் நலம் எனச் சொல்லாமல் சொன்னது உங்களின் மின்மடல். மறந்து போன ஒன்றை மறுபடியும் ஞாபகப்படுத்தும் முயற்சிக்கு பாராட்டுகள்.
தாமதமான பதில் மடலுக்கு மண்ணிக்கவும். திருப்பதிக்கு திடீர் பயணமாய் சென்றிருந்தேன். அக்கா மற்றும் மாமாவோடு. அங்கு நல்லதொரு புது அனுபவமாய் கீழிருந்து மேல் திருப்பதி வரை நடந்து சென்றிருந்தோம். எந்திர வாழ்க்கையில் நனைந்து விட்ட நம் உடலுக்கு சற்றே வேலை கொடித்தோம். புத்துணர்ச்சி தந்த பயணமானது.
மடல்கள் முதலில் நம் பிரியமானவர்களுக்கும், பிரிவினால் ஏங்குபவர்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தோம். நாளடைவில் தொலைபேசிகள், "கொரியர்" சேவை வந்துவிட தகவல் பரிமாற்றம் இன்னும் துரிதப்பட்டது. பின்பு கைபேசிகள் வர குறுஞ்செய்தியும் பழக்கமானது. உடனடியாய் பதில் சொல்லி பழக்கப்பட்டோம்.
சேவைதாரர்கள் மிக கச்சிதமாய் பயன்பாட்டு தொகையில் நெருக்கம் தந்தனர். இருந்தும் சிக்கனமாய் பயன்படுத்தினோம். They limited our usage to 200 messages and still we effectively used. They introduced 2g networks and introduced web based messenger. இங்கதான் twist. They made us unlimited usage. What we do? At the starting phase yes we used abnormally and now it is been minimised. Even though we have no boundaries, we stopped messaging each other. Replying for a message also we are not doing.
எளிதாகிப் போனதால் என்னவோ மதிப்பிழந்து சாதரணமாகிப் போனது. பதில்கள் வராத காரணத்தினால் அன்பிலும் விரிசல் ஏற்பட்டு போகிறது. நாட்கள் நகர மடல்களின் நிலமைதான் ஆனது.
உங்களின் இந்தத் தூண்டல் என் பிரியமானவர்களுக்கும் மடல் எழுதச் சொல்கிறது. நாம் இழந்த மடல்களை மட்டும் அல்ல, அன்பினையும் உயிர்பிக்கும் என்ற நம்பிக்கை ஊட்டுகிறது. இதுஒரு எதிர்பாராத பரிசாக, பொக்கிசமாக அமையும் என்பதில் ஐயமில்லை...!!!
எளிமை வளிமை சேர்க்கின் அது பயனே...!!!
ப்ரியமுடன்
அன்புத் தம்பி
நமசிவாயம்
சென்னை
07.03.2017
No comments:
Post a Comment