எனக்கின்று வயது 60...
என்றே இளித்தாள்..
கிளவரசியானாலும்
இன்றும் இளவரசிதான் இவள்...
பிறந்தபோது எனை
தூக்கி முத்தமிட்டாள்...
பாடித் தாலாட்டினாள்...
என்னோடு கதைத்தாள்..
கதை சொன்னாள்...
நானோ திரும்ப பேசாதிராத போது...!!!
அம்மா என்றே அழைத்தே அழுதேன்,
புன்னகை மட்டும் திரும்பச் செய்தேன்..!!!
ங் முதல் இன்று வரை
கற்றும் கொடுக்கிறாள்...!!!
காய்ச்சல் எனக்கு வர
துவண்டும் போகிறாள்...!!!
காயம் அவளுக்கு வர
கண்ணீர் எனக்கு வந்திராது
வலியோடு புன்னகைத்தாள்..!!!
பிடித்ததும் அவளுக்கு தெரியும்!
பிடிக்காததும் அவளுக்கு தெரியும்!!
தெரிந்தே சொல்வாள் இன்று
அஷ்டமி என்று...!!என் நலன் கருதி...!!!
திட்டியும் கோபமிராது உம்மென
நகர்ந்து செல்வாள், பத்து ரூபாய்
முடிந்து வைத்து...!!!
அந்த ரூபாயும் சில்லரை இல்லாது
என்னிடமே கடனும் பெற்று
கணக்கு முடிப்பதில் சண்டை இடுகிறோம்.!!!
முழுதாய் சாப்பிட்டேன்,
இவள் ஊட்டி விடுகையில்...!!
முப்பதைக் கடந்தும்,
இன்றும் அப்படித்தான்...!!!
சோர்வான போது இவள்
மடி போதும்...சாய்ந்தே புலம்பி
தெம்பாகிவிடும்... !!
இரவில் இவள் சேலை
மெத்தை போதும்... உன்னத உரக்கம்
தந்திடும்....!!!
ஐந்து நொடிக்கு அலாரம் எவனும்
கண்டதில்லை...இவள் அடித்து எழுப்புவாள்...!!!
திண்ணுட்டு தூங்கு என்று...!!!!
தோன்றும் வேளையில் அலைத்தே,
வேலையில் இருந்தும் சிலநொடி பேச வேண்டும்...!!!
முதலில் வாழ்த்தவில்லை என்றே
திட்டியும் பெறுவாள்...!!!
சேலை வாங்கினால் திட்டியும் தீர்ப்பாள்...!!!
பிடிக்காதை செய்த போதும்
கண்ணில் நீர்மல்க சொல்லுவாள்...
ஏன் நமசு இப்படி பன்ற...???
இதனை எழுதின போதும்,
படித்துக் காட்ட வெட்கம் எனக்கு...!!
படித்துக் கேட்டு பாராட்டுவாள்,
என்னத்த எழுதியிருக்க என்றே நகைத்து...!!!
காதலியும் தோற்றிடுவாள்
உன் நேசத்தின் முன்னே...!!!
- 07.05.16
No comments:
Post a Comment