Thursday, August 22, 2013

கட்டிடத்து திமிங்கலம்..!!!

சிறிதாய் மழை பெய்து
மண் வாசனையுடன்
மீன் வாசனையும் சேர்ந்து கொண்டது
பட்டினபாக்க கடற்கரை சாலை
பயணத்தின் போது...!!!

சிறகடித்து பறந்தது 
என் மனம் மட்டும் அல்லாது
மீன் இறை தேடி 
காகக்கூட்டமும் தான்...

கட்டிடத்து மாடியில் அமர்ந்து
சற்று தொலைவே நோக்க
எதிர் கட்டிடத்து மாடியில் இருந்து
எகிறிக்குதிக்குது (சிமெண்ட் )திமிங்கலங்கள் சில
வானம் எனும் நீல பெருங்கடலை நோக்கி.. 

No comments:

Post a Comment