Thursday, August 22, 2013

மே தின உழைப்பாளர்கள்...!!!

மே தின கொண்டாட்டம் முடிந்தது...
சிறப்புரை ஆற்றிய 
பெரியவர்களும் பங்கேற்ற 
கடைநிலை உழைப்பாளர்களும் 
மகிழ்வோடு
விடைபெற்றுச் செல்ல...

ஒருங்கினைத்தவர்கள் 
ஓரமாக நின்று மேற்பார்வையிட...
மேடைகளையும், ஒலிபெருக்கிகளையும், 
அலங்கார விளக்குகளையும்
கலட்டிக் கொண்டிருந்தனர் ஊழியர்கள் - மே தின
விடுமுறையை மறந்து.... இவர்கள் வியர்வைக்கு
தக்(ங்)க பரிசாய் "வெற்றி"யை தவிர
வேரென்ன இருக்க முடியும்... !!!!

காசுகள் இவர்கள் கண்டதில்லை...மாறாக
கஷ்டங்களை தான் காண்கின்றனர்...
மன நிறைவு தராத சந்தோசங்களை விட
மன வலிமை தரும் சங்கடங்கள் தான் அதிகம்..!!!

காசுகள் இவர்கள் சேர்க்கவில்லை தவறாமல்
கல்வியை சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் -
தங்கள் செல்லச் செல்வங்களுக்கு....
உங்கள் உழைப்பிற்க்கு அவர்கள் ஊதியம் பெருவர்..
மகிழ்வோடு கொண்டாடுவோம்...
உழைத்து கொண்டே மே தினத்தை...!!!!

No comments:

Post a Comment