Thursday, August 22, 2013

சிவ நாமம் அல்ல இது..!!!

காணக் காத்திருந்து
கால்கள் கடக்காமல்
சிறு தூரம் சிற்றெறும்பாய்
வரிசையில் நடந்து கொண்டே
வில்வம் கையில் மாற்றி
நாதன் உன் துதிபாட
விரைவாய் எமை அழைத்தாய்
அழகாய் வரவேற்றாய் -
அன்னையே !!!
அப்பனே உனைக் காண
அடிவைத்து அடி நகர்ந்தேன்
ஆராதணை அழகோடு வில்வம்
சமர்ப்பித்து மீண்டும் துதிக்கிறேன்
"நமசிவாய வாழ்க
நாதன் தாழ் வாழ்க
இமைப் பொழுதும்
என் நெஞ்சில்
நீங்காது வாழ்க" !!!

No comments:

Post a Comment