Sunday, August 25, 2013

செல்ல சித்தப்பாக்கள்...

எங்களோடு இவர்கள் 
பிறக்கவில்லை ஆனால்
எங்களுக்கு இவர்கள்
அண்ணன்களும் கூட...
எங்கள் அம்மாவிடம் 
"அத்தாச்சி !!!தோசை ஊத்துங்க "
என கேட்டு விரும்பிச் சாப்பிடும் பொழுது...!!!

ஏன் அம்மாவிடம் கேட்டால் கூட
இதை ஒத்துக் கொள்வார்...
அவளும் குருவு, ராஜு
என்று எங்களைவிட
செல்லமாய் அழைப்பதனால்...

அம்மாவிற்க்கு ஒன்றென்று உடனே
மூத்த பிள்ளை ஓடிவந்து
பார்த்துக் கொள்ள,
இளைய பிள்ளை வர
முடியா சூழலால் மனமுருகி
அழுது கொண்டிருந்ததை
நாங்கள் ஒரு போதும் மறவோம்...!!!

எங்களோடு இவர்கள்
பயின்றதும் இல்லை..
இருந்தும் இவர்கள்
எங்களுக்கு நண்பர்களும் கூட...
சித்தப்பாவோடு சென்றால்
சினிமாவுக்கு செல்லலாம்
எங்கள் வீட்டில்...
அதோடு மட்டுமா திருவிழா
காலத்தில் தெரு சுத்தித் திரிவதும்
இன்றும் இவர்களோடு தான்...


சில நேரங்களில் இவர்கள்
குருக்களாகவும் இருந்தனர்...
"கேரம்" விளையாட 
கற்றுக் கொடுத்தனர்...

இவர்களுக்கு நாங்கள்
பிறக்கவும் இல்லை
இருந்தும் இவர்கள்
எங்களை கண்டித்ததும் உண்டு...
தந்தைகளாய்...!!!
கல்வியில் கவனம் வேண்டுமென்று !!!
வாழ்க்கைக்கு வழிகாட்டினர்...
தாங்கள் பட்ட இன்னல்கள்
நாங்கள் பட்டுவிடக் கூடாதென்று...

உண்மையில் இவர்கள்
எங்களுக்கு சித்தப்பா உறவு...!!!


இவர்களுக்கு கல்யாணம் 
என்றதும் சந்தோசம் பல 
இருந்தும் சில 
பயமும் இருந்தது...
வரன் எப்படி இருப்பர்? 
என்று... நல்ல வேலை
வரம் தான் பெற்றிருக்கிறோம்
இவர்களைப் போலவே 
அவர்களும் அமைந்துவிட்டனர்...



தனிமை நிறைந்த இந்த இரவு
இந்த தமிழையும் குடுத்தது...
இன்று இவர்களுக்கு பிறந்த நாள்...

வாழ்த்துக்கள் (அண்ணன்களே...நண்பர்களே....சித்தப்பாக்களே) .... 

No comments:

Post a Comment